Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடுரோட்டில் விஜயகுமார் - வனிதா கைகலப்பு! நடந்தது என்ன?

28 டிச, 2010 - 08:42 IST
எழுத்தின் அளவு:

 நடிகர் விஜயகுமாரும், அவரது மகள் வனிதாவும் விமான நிலைய வாசலில் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த சிறுவன் விஜய் ஸ்ரீஹரியை உரிமை கொண்டாடுவது தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே விஜயகுமார் - வனிதா இடையே மோதல் இருந்து வந்தது. விஜயகுமாரின் பங்களா வீட்டில் ஆரம்பித்த பிரச்னை போலீஸ் நிலையம், ‌கோர்ட் என வளர்ந்து வருகிறது. வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ் தன்னை தாக்கியதாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், அவரை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்துதான் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தந்தை விஜயகுமாரின் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், அவரது வீடு ஒரு பாவப்பட்ட வீடு என்றும், தாய் மஞ்சுளாவை போதைக்கு அடிமையாக்கி விட்டார்கள் என்றும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்த வனிதா, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வெளியே சொன்னால் வெட்கக் கேடு என்றும் கூறினார். அதேபோல சொத்துக்காக விஜயகுமார் எ‌துவும் செய்வார் என்றும் வனிதா ஏற்கனவே கூறியிருந்தார்.

சினிமா பிரபலங்கள் மத்தியில் நாட்டாமை போல செயல்பட்டு வந்த விஜயகுமாரின் வீட்டில் ந‌டந்து வரும் பிரச்னையில் விஜயகுமாருக்கு நெருக்கமான நடிகர் - நடிகைகள் சிலர் தலையிட்டதாகவும், போலீசாரை வைத்து மிரட்டியதாகவும் வனிதா குற்றம் சாட்டினார். இதற்கிடையில் மகனை ஒப்படைப்பது தொடர்பான வழக்கில்,  சட்டப்படி மகன் ஸ்ரீஹரி, தாய் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் நடிகர் விஜயகுமார் தனது பேரன் ஸ்ரீஹரியுடன் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் வருகையை அறிந்த வனிதா, தனது மகனை அழைத்து செல்வதற்காக, இரண்டாவது கணவர் ஆனந்தராஜூடன் காரில் வந்து விமான நிலையத்தில் காத்திருந்தார். விமானத்தில் இருந்து இறங்கி விஜயகுமார், ஸ்ரீஹரியுடன் வெளியே வந்தார். அப்போது வனிதா, ம‌கனை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும், கோர்ட் உத்தரவுடி அவனை தன்னுடன் அனுப்பி வைக்கும்படியும் ‌விஜயகுமாரிடம் கேட்டார். ஆனால் விஜயகுமார் பேரனை ஒப்படைக்க மறுத்து விட்டார். பேரனை கட்டியணைத்துக் கொண்ட விஜயகுமார், வனிதா கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் ஒப்படைக்க மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சிறுவன் ஸ்ரீஹரியின் கையை பிடித்து வனிதா இழுத்தார். விஜயகுமாரோ, சிறுவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மோதல் கைகலப்பாக மாறியதை பார்த்த சிறுவன் ஸ்ரீஹரி கதறி அழுதான். மகன் அழுவதை பார்த்த வனிதாவும் கண்ணீர் வடித்தார். விஜயகுமாரிடம் இருந்து மகனை எப்படியாவது மீட்டுக் விட வேண்டும் என ‌போராடினார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் ‌பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து விஜயகுமாரும், வனிதாவும் ‌போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். போலீசார் சமாதானம் பேச முயன்றனர். ஆனால் போலீசாரின் சமாதானத்தை ஏற்காத வனிதா, என்னிடம் கோர்ட் ஆர்டர் இருக்கிறது. சட்டப்படி அவனை என்னுடன் அனுப்பி வையுங்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்ததுடன், யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வனிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பெற்ற மகனை என்னுடன் அனுப்பி வைக்க இப்படி மறுக்கிறார்களே. சட்டப்படி குழந்தை என்னிடம் இருக்க வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் இருக்கிறது. அதனையும் மீறி மகன் ஸ்ரீஹரியை அழைத்து செல்கிறார்கள். எனக்கு நியாயம் வேண்டும். விஜயகுமாருக்கு என் மகனை அழைத்து செல்ல என்ன ரைட்ஸ் இருக்கிறது. அவரிடம் சிறுவன் இருக்கலாம் என்ற கோர்ட் ஆர்டர் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். அவர் என் மகனை கடத்தி செல்கிறார், என்று கண்ணீர் மல்க கூறினார்.

Advertisement
கருத்துகள் (42) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (42)

Rajkumar - Karaiyur,pudukkottai(dt),இந்தியா
07 டிச, 2011 - 22:17 Report Abuse
 Rajkumar அந்த பிஞ்சு மனதை வெம்ப விடாதீர்கள். அதன் வலி உணர்ந்தால்தான் தெரியும். Because அப்படிப்பட்ட வலி அனுபவம் எனக்கு உண்டு.
Rate this:
ammiya - Denhelder,நெதர்லாந்து
31 டிச, 2010 - 04:17 Report Abuse
 ammiya இந்த குடும்பத்துக்கு வெட்கம்,சூடு, சுரணை என்று ஏதாவது உண்டா? வனிதாவுக்கு தன் பையனை விட அவனுக்கு வரப்போகும் சொத்தில் தான் அம்பு,பாசம்....வியஜகுமாரும் அப்படியே.இதில் பாவம் அந்தப் பிஞ்சு குழந்தை.விமானநிலையத்தில் நடந்த யாவும் வீடியோவில் பார்த்தோம்.பாவம் அந்தப் பையன் கதறி அழுவதைப் பார்க்க முடியல்ல.ஆனா இதுகள் என்னவென்றால்,பணம் என்ற பேயால் ஆடுகிதுங்க.கருமம்.......
Rate this:
sundar - abu dhabi,இந்தியா
30 டிச, 2010 - 00:52 Report Abuse
 sundar ஹாய் விஜயகுமார் நீ உன் பசங்களை ஒழுங்கா வளக்க தெரியில நீ எப்படி உன் பேரன ஒரு அல்ல பையனா வளக்க போற? தீர்ப்பு சொல்ற கேளு உன் பேரன வனிதாகிட்ட ஒப்படசிடு..
Rate this:
sumi - iowa,யூ.எஸ்.ஏ
29 டிச, 2010 - 23:25 Report Abuse
 sumi this is really look like cinema story, whatever happens, the boy should be stay with mom,if he likes. noone cant understand the boys feelings.
Rate this:
Bharathi - Chennai,இந்தியா
29 டிச, 2010 - 21:25 Report Abuse
 Bharathi பெற்றவள் ஆகட்டும், பிள்ளையின் தாத்தாவாகட்டும், யாருமே அந்த குழந்தையைப் பற்றி நினைபதாக தெரியவில்லை. ஒரு குழந்தையை மீடியாவில் வெளிப்படுத்தி, அக் குழந்தையின் தகப்பன், ஸ்டேப் பாதர் பற்றி சொல்லி கொண்டிருபதோடு மட்டுமல்லாமல், அக் குழந்தையை பந்தாடினால், அவன் மன நிலை எவ்வளவு பாதிக்கப்படும்? பள்ளியில் பிற குழந்தைகள் அவனை எப்படி நடத்துவர்? யார் எப்படி irunthalum, அக் குழந்தையின் நலன் கருதி இப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும். முதலில் அவனைப் பள்ளிக்கு அனுப்புற வேலையை பார்க்கவும்.
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in