டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
3 என்ற படத்தில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படம் சுமாரான வெற்றிதான் என்றாலும், அவர் சோர்ந்து விடவில்லை. அடுத்து பெரிய ஹிட் கொடுப்பேன் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் கதையை ரெடி பண்ணி, ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வை ராஜா வை படத்தை இயக்கினார்.மேலும், இந்த படத்தில் தனுஷ்-டாப்சியை கெஸ்ட் ரோல்களில் நடிக்க வைக்க வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டிருந்த விசயம் என்றாலும், பின்னர் அவர்களது கேரக்டர்களை இன்னும் பெருசுபடுத்தி படத்துக்கு புதிய பலம் சேர்த்தார்.
அதேபோல், எஸ்.ஜே.சூர்யா ஆடியிருக்கும் பாடலைப்பற்றி முதலில் யோசிக்கவே இல்லையாம. மொத்த காட்சிகளையும் படமாக்கிய பிறகுதான் இப்படியொரு பாடல் வைத்தால் என்ன என்ற யோசனை தோன்ற அவரிடம் கேட்டாராம். அவரும் கண்டிப்பாக ஆடுகிறேன் என்று சொன்னதையடுத்து பிலிம் சிட்டியில் அந்த பாடலை படமாக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த பட வேலைகளை எப்போது தொடங்குகிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், இந்த படவேலைகளில் இறங்கியதில் இருந்து குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால், கோடை விடுமுறையை அவர்களுடன் ஜாலியாக கழிக்கப்போகிறேன். அதனால் அவர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு டூர் செல்லப்போகிறேன். அது முடிந்து வந்தபிறகுதான் அடுத்து எந்த மாதிரியான படம் பண்ணலாம் என்பது பற்றி முடிவெடுப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா.