டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உத்தம வில்லன் படம் ரிலீஸ் பிரச்னையில் தமிழக அரசின் தலையீடு எதுவும் கிடையாது என சரத்குமார் கூறினார். ரமேஷ்அர்விந்த் இயக்கத்தில், கமல் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட உத்தமவில்லன் படம் நேற்று வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தரப்புக்கும், விநியோகஸ்தர்கள் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் தடைபட்டது. நேற்று இரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டு இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காலையிலும் படம் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சரத்குமார் பேசுகையில், உத்தம வில்லன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் படம் ரிலீஸாவது தாமதமானது. 27 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது படம் ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்பிரச்னையில் தமிழக அரசின் தலையீடு எதுவும் கிடையாது என்று கூறினார்.
இந்த சந்திப்பின் போது லிங்குசாமி, ஞானவேல்ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.