ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ வந்தால் அது கெடுதல் என்று சொல்லும் வாசகத்தை போட வேண்டும் என்கிற விதிமுறைக்கு பிறகும் சிகரெட், மது அருந்தும் காட்சிகள் குறையவில்லை. இந்த நிலையில் பிரபல அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தலைவர் டாக்டர் சாந்தா, சினிமாவில் சிகரெட் குடிக்கும் காட்சிக்கு முழுமையான தடைவிதிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் சுருக்கம் வருமாறு: நாட்டில் 40 சதவிகித புற்று நோய்க்கு காரணம் புகைபிடிக்கும் பழக்கமாகும். புகையிலை கட்டுப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து இந்திய அரசு எடுக்கும் முடிவில் சிகரெட் கம்பெனிகள் உள்பட யாரும் குறுக்கிட முடியாது.
திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்ற வாசகம் போடப்படுகிறது. இந்த வாசகம் போட வேண்டும் என்கிற நிபந்தனையை நீக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர்கள் மத்திய தகவல் ஒளிபரப்பு துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறிகிறேன். அவர்களின் கோரிக்கையை ஏற்கக் கூடாது. மேலும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலுமாக தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு சாந்தா பிரதமருக்கு எழுதிய இரண்டு கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.