பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வில்லனின் மனைவி நல்லவளாகத்தான் இருக்கவேண்டும் என்கிற சினிமா கிளிஷேக்களை உடைத்து 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடிப்பில் ஆச்சர்ய முகம் காட்டியிருந்தார் பார்வதி நாயர். இதோ இப்போது உத்தம வில்லனில் மிகச்சிறிய வேடம் தான் என்றாலும், கமலின் மகனை காதலிக்கும் பெண்ணாக இரண்டு காட்சிகளில் வந்தாலும் தனது பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.
மலையாளத்தில் 2013ல் 'பாப்பின்ஸ்' படம் மூலம் அறிமுகமான அந்த வருடத்திலேயே ஏழு படங்களில் நடித்த இவருக்கு, சோதனையாக கடந்த வருடம் 'ஆங்ரி பேபீஸ்' என்கிற ஒரே ஒரு மலையாள படம் மட்டும் தான் வெளியானது.. ஆனாலும் இந்த வருடம் தமிழில் அஜித், கமல் படங்களில் நடித்துள்ளதால் அந்த இழப்பை எல்லாம் ஈடுகட்டியது போன்ற சந்தோஷத்தில் இருக்கிறார் பார்வதி நாயர்.
தற்போது மலையாளத்தில் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கிவரும் 'லார்ட் லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு பார்வதி நாயரை தேடி வந்துள்ளது. இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடன், நம்ம பரத்தும் ஒரு ஹீரோவாக நடிக்கிறார்.. இதுதவிர 'வாஸ்கோடகாமா' என்கிற கன்னடப்படத்திலும் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இவளால் இந்த கேரக்டரை பண்ணமுடியுமா என்கிற சந்தேகம் தன்மீது எப்போதும் யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் பார்வதி நாயர்.