தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல பாலிவுட் நடிகைகள் ராணிமுகர்ஜியும், வித்யாபாலனும் உதட்டோடு, உதடு முத்தம் கொடுத்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
நோ ஒன் கில்டு ஜெஸிகா என்ற பாலிவுட் படத்தில் ராணிமுகர்ஜியும், வித்யாபாலனும் நடிக்கின்றனர். இதனிடையே படப்பிடிப்பின்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இருவருக்கும் சண்டை எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க, டி.வி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார் இப்படத்தின் தயாரிப்பாளர். இதில் வித்யாபாலனும், ராணிமுகர்ஜியும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், "நம் இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக வந்த செய்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அந்தமாதிரி எதுவும் இல்லை. இதனை ரசிகர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது" என்று ராணிமுகர்ஜியிடம் கேட்டார் வித்யாபாலன். "அதைபற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே" என்று கூறிய ராணிமுகர்ஜி, வித்யாபாலனை கட்டிபடித்து உதட்டோடு உதடாக நச் என்று ஒரு முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஆனால் நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கோ ஏகப்பட்ட சந்தோஷம்.