விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
பத்லபூர் படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளார் ஸ்ரீராம் ராகவன். இந்த படம், விகாஸ் ஸ்பரூப் எழுதிய தி ஆக்சிடென்டல் அப்ரன்டிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட உள்ளது. இந்த கதை, ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாம். கதைப்படி, எலக்ட்ரானிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு, 7 பரிட்சைகளில் பாஸ் செய்தால் அந்த கம்பெனிக்கே சிஇஓ ஆகலாம் என்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஹீரோயினைச் சுற்றியே கதை நகர்வதால் அந்த கேரக்டரில் நடிக்க முன்னணி இளம் நடிகைகள் தொடர்பான வேட்டை நடந்துள்ளது. பல முன்னணி நடிகைகளிடம் இந்த படத்தின் கதை கூறப்பட்டது. கதையை கேட்டதுமே தீபிகா படுகோனே தான் ஓகே கூறினாராம். இந்த படத்திற்காக ஸ்ரீராம், தீபிகாவை அணுகி உள்ளார். ஆனால் படத்தின் திரைக்கதையை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என தீபிகா விரும்பி உள்ளார். சமீபத்தில் தான் இந்த புத்தகத்தின் காப்புரிமையை ஸ்ரீராம் வாங்கினாராம். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவாகி உள்ளது