இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாடலாசிரியராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பா.விஜய் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடைத்தை பிடித்தார். இன்றைய உயரத்தைவிட மேலும் உயரத்துக்குச் செல்ல வேண்டியவர். தடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்தது. தாய் காவியம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் பா.விஜய். அந்தப் படம் பாதியோடு ட்ராப்பாகி விட்டது. அதன் பிறகு 'ஞாபகங்கள்', 'இளைஞன்' ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் மூலம் சினிமாவில் தன்னை ஒரு நடிகராகவும் அடையாளம் காட்டிக்கொண்டாலும் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
இந்த படங்களின் தோல்வியைத் தொடர்ந்து நடிகராக பா.விஜய்யின் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. பின்னர், 'தகடு தகடு' என்ற படத்தில் நடித்திருக்கிறார் பா.விஜய். இந்தப்படத்தை அடுத்து 'வில் மேக்கர்ஸ்' என்ற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றை துவங்கி பா.விஜய்யே இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். பாடலாசிரியராக படத்துறைக்கு வந்தவர் நடிகராகி இப்போது தயாரிப்பாளர், இயக்குனர் என்ற துறைகளையும் கையில் எடுத்திருக்கிறார். வெற்றி கிடைக்குமா?