இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பொதுவாகவே சினிமாத்துறையில் ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது என்ற குரல் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். ஆனால் டோலிவுட்டில் ஒரு பிரபல நடிகைக்கு சம்பளமாக ரூ 1 கோடி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போது அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் காட்டில் தான் மழை என்று சொல்லும் அளவிற்கு அவர் பிரபல ஹீரோக்களான ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், மகேஷ் பாபு போன்றவர்களுடன் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடிக்க இருக்கிறார். அவர் விரைவில் முன்னணி இடத்தை பிடிப்பார் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் அவர் தனது சம்பளத்தை உயர்த்த வில்லை. இந்நிலையில் பிரபல ஹீரோவான நிதின் தனது படத்தில் ராகுல் ப்ரீத் சிங்கை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு ரூ 1 கோடியை சம்பளமாக தரவும் தயாராகி விட்டார் என்று தெரிகிறது. தற்போது ராகுல் ப்ரீத் சிங் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களுக்கு இடையே உள்ள நாட்களை தனது படத்துக்கு ஒதுக்குமாறு ஹீரோ நிதின் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.