தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குரு, ராவணன், கடல் என தொடர் தோல்விகளுக்கு பிறகு ஓகே கண்மணியின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மணிரத்னம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் படக்குழுவினருக்கு பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடினார். தன் படத்தின் வெற்றிக்காக இப்படி தன் வீட்டில் மணிரத்னம் பார்ட்டி வைப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள். ஓகே கண்மணியின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை உடனே ஆரம்பிக்கிறார்.
தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் அடுத்து அவர் இந்தி, தமிழில் படம் தயாரிக்கிறார். ஹீரோ தனுஷ் என்பது முடிவாகி இருக்கிறது. ஹீரோயின் ஆலியாபட்டாக இருக்கலாம். இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது. தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்கு பிழைக்கச் செல்லும் இளைஞன் அங்கு ஒரு இந்திப் பெண்ணை காதலிப்பதும் அது தொடர்பாக வரும் பிரச்சினைகளும்தான் கதை என்கிறார்கள். மணிரத்னம் ஸ்டைலில் புதிய கோணத்தில் உருவாக இருக்கிறது. ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரகுமான் இசை என்பதும் அப்படியே தொடர்கிறது.