ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வடகறி, திருமணம் என்னும் நிக்கா படங்களின் தோல்வியில் இருந்து வலியவன் தன்னை மீட்கும் என்று எதிர்பார்த்தார் ஜெய். ஆனால் வலியவனும் அவரது காலை வாரிவிட்டு விட்டது. அதனால் தற்போது புகழ் படத்தை முழுசாக நம்பி நடித்துள்ளார் ஜெய்.
அதைத் தொடர்ந்து இப்போது திரு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெய். ஆனால், புகழ் படத்தில் இவன் வேற மாதிரி சுரபியுடன் நடித்த அவர், இந்த புதிய படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதியை அவருக்கு ஜோடி சேர்க்கும் முயற்சி நடந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, மார்க்கெட்டில் பேசப்படும் நடிகைதான் வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
அதன்காரணமாக, தற்போது ஜெய்க்கு ஜோடியாக நடிக்க டாப்சியை ஒப்பந்தம் செய்துள்ளார் டைரக்டர் திரு. அதனால் டாப்சி மீதுள்ள நம்பிக்கையில் இந்த படத்தில் அதிக உற்சாகத்துடன் நடிக்கத் தொடங்கி விட்ட ஜெய், இதே படத்தில் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த நெகடீவ் வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கயிருப்பதால், பலமுறை நழுவி வந்த வெற்றிக்கனி இந்த முறை கட்டாயம் தனது கைசேர்ந்து விடும் என்று உற்சாகமாக இருக்கிறார். மேலும், சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரகனிதான் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.