மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிங்கம் படத்தை அடுத்து வேங்கை, சிங்கம்-2 படங்களை இயக்கிய ஹரி, கடைசியாக விஷால் நடித்த பூஜை படத்தை இயக்கியிருந்தார். அதையடுத்து சிங்கம்-3 படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சிங்கம் படத்தின் இரண்டு பாகங்கள் வந்துள்ள நிலையில், 3வது பாகம் போரடித்து விடாமல் புதுமையாக இருக்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாக குற்றாலத்தில் முகாமிட்டு தீவிர கதை ஆலோசனை நடத்தி வந்தார் ஹரி.
அங்குள்ள சீசன் மற்றும் புதிய சூழல் வித்தியாசமான சிந்தனைக்கு வழிவகுக்கும் என்பதால், மொத்த ஸ்கிரிப்ட் வேலைகளும் முடியும் வரை குற்றாலத்திலேயே தனது கதை இலாகாவுடன் இருந்தவர் மொத்த ஸ்கிரிப்ட் வேலைகளும் முடிந்து விட்டதால் தற்போது சென்னை திரும்பி விட்டார்.
அதையடுத்து, ஜூன் மாதம் சிங்கம்-3 படவேலைகள தொடங்கப்படவிருப்பதால், அடுத்தபடியாக நடிகர் நடிகைகள், டெக்னீசியன்களை ஒப்பந்தம் செய்யும் வேலைகளும் நடக்கிறது. அதோடு, இந்த படத்துக்காக முந்தைய சிங்கம் படங்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்ட சூர்யாவின் கெட்டப்பையும் மாற்றப்போகிறாராம். அதனால் தற்போது 24 படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அப்பட வேலைகளை விரைவில் முடித்து விட்டு சிங்கம்-3-க்காக தன்னை தயார்படுத்தப்போகிறாராம்.