ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
மணிரத்னத்தின் கடல் படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன், அதையடுத்து ஜெய்ஹிந்த்-2 படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். அதோடு அதன்பிறகு தனது முந்தைய ஹிட் படங்களில் இரண்டாம் பாகங்களை தொடர்ச்சியாக இயக்கி நடிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஜெய்ஹிந்த்-2 அவரை ஏமாற்றி விட்டது.
அதனால் தொடர்ந்து நடிப்பில் இறங்கி விட்ட அர்ஜூன், தற்போது தனது தாய்மொழியான கன்னடத்தில் அபிமன்யூ, கேம் படங்களிலும், தமிழில் ஒரு மெல்லிய கோடு படத்திலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பாசிட்டீவ், நெகடீவ் என்று மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், தான் நடிக்கும் கன்னட படங்களில் தனது சென்னை நண்பர்கள் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக்கொடுக்கிறார் அர்ஜூன். இதற்கு சில கன்னட நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தமிழ்நாடு எப்படி என் தாய் வீடாகி விட்டதோ, அதேபோல் தமிழர்கள் என் சகோதரர்கள். அதனால் அவர்களுக்கு நான் உதவி செய்ய கடமைப்பட்டவன் என்கிறாராம்.
மேலும், தனக்கு யார் போன் செய்தாலும், முதலில் வணக்கம் என்றுதான் சொல்கிறார் அர்ஜூன். அதேபோல் பேசி முடித்ததும் நன்றி என்று அழகாக தமிழிலேயே பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அர்ஜூன்.