தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெண் மருத்துவர் கவிதா கொடுத்த புகாரின் அடிபடையில் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் தெலுங்கு திரையின் பிரபல தயாரிப்பாளர் சி கல்யாண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் கவிதாவும் தயாரிப்பாளர் சி கல்யாணும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் சேவைக்காக அந்த அடுக்கு மாடி குடியிருப்பு இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இழப்பீடு தொகையும் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீடு தொகையை பிரிப்பதிலேயே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இழப்பீடு தொகையை தனக்கு சரியாக வழங்காமால் தயாரிப்பாளர் சி கல்யாண் தன்னை ஏமாற்றுவதாகவும், மிரட்டுவதாகவும் கவிதா போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தயாரிப்பாளர் சி கல்யாண் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.