மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
இந்திபட இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் பியாரிலால் எங்களால் முடியாததை உங்கள் இசையமைப்பளர் இளையராஜா செய்து காட்டுகிறார் என்று ஒருமுறை கே.பாக்யராஜ்யிடம் கூறிருக்கிறார். இந்த தகவலை ஒரு படவிழாவில் பாக்கியராஜ் கூறியபோது முந்தான் முடிச்சு படத்துக்கு கங்கை அமரனைத்தான் நான் தீர்மானித்திருந்தேன். படத்தின் கதையை கேட்ட ஏவிஎம் நிறுவனத்தார் இந்த கதைக்கு இளையராஜா தான் பொருத்தமாக இருப்பார். அவரை புக் பண்ணுங்க என்று சொல்லிவிட்டனர். நான் ராஜாவிடம் கேட்டதும் மறுத்துவிட்டார். கங்கை அமரனை அமர்த்திவிட்டு இப்போ ஏன்கிட்டே வர்றீங்களே என்றார். சரி விடுங்க அவரும் உங்க தம்பி தானே என்று பேசி சமாதப்படுத்தினேன். படத்தை முடித்து ரீ ரெக்கார்டிங் செய்த போது ஏழு சீக்வென்ஸ் சொன்னேன். இது சொல்லி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டு பின்னணி மியூசிக் செய்தார். இந்த சீக்வென்ஸ் எனக்கே மறந்து விட்டது. ராஜா சாருக்கு மெமரி பவர் ஜாஸ்தி. இந்த வார்த்தையை என்னைப்போலவே இந்தி இசையமைப்பாளர் லட்சுமி காந்த் பியாரிலால் இந்த வார்த்தையை பயன்படுத்தி பாராட்டினார் என்று கூறினார் கே. பாக்யராஜ்.