மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கேரளாவில், கோவில் திருவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டிக்கு, ஹாலிவுட் நடிகை பமீலா ஆன்டர்சன் கடிதம் எழுதி உள்ளார்.
கேரளாவில், கோவில் திருவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக, திருச்சூர் பூரம் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு பிரபலமானது. இந்நிலையில், ஹாலிவுட் நடிகையான பமீலா ஆன்டர்சன், கேரள காங்., கூட்டணி அரசின் முதல்வரான உம்மன் சாண்டிக்கு, இ-மெயில் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு எதிராக, இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரள திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது, விழாக்களை காண வரும் பார்வையாளர்களையும் அதிருப்தி அடைய வைக்கிறது. யானைகளை சங்கிலிகளால் கட்டிப் போடுவதும், வெப்பமான நடைபாதைகளில் அவற்றை நடக்கச் செய்வதும், அங்குசம் அல்லது இதர ஆயுதங்கள் மூலம் அவற்றை துன்புறுத்துவதும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. யானைகளுக்கு பதிலாக, அதே அளவு உயரத்திற்கு மூங்கில் உட்பட, சில வகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொம்மை யானைகளை, விழாக் களுக்கு பயன்படுத்தலாம். அதற்கான செலவுகளை ஏற்க, விலங்கு நல அமைப்பான, பீடாவும் தயாராக உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆன்டர்சனின் இந்தக் கடிதத்தை, பீடா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: விலங்குகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் சட்ட விரோதம். கொடுமையான பயிற்சிகளுக்குப் பின்னரே, திருவிழாக்களின் போது நடைபெறும் அணிவகுப்புகளில், யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ், யானைகளை பிடிப்பது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், காடுகளில் இருந்து, சட்ட விரோதமாக யானைகள் பிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது. இது, தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.