‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இன்றைய இணைய உலகத்தில் இணையதளங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது. எந்த ஒரு நிகழ்வும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவி விடுகிறது. இதற்கு இணையதளங்களே முழு முதற்காரணமாக அமைந்துள்ளது. இந்த கிடுகிடு வளர்ச்சியால் திரையுலகத்தினரும் சமீப காலமாக கொஞ்சம் அஞ்சியே இருக்கிறார்கள். 'அஞ்சான்' படத்தையும் இணைய தள பயன்பாட்டாளர்கள் அஞ்ச வைத்தனர். அதிலிருந்துதான் தயாரிப்பாளர்களும் இணையதளங்கள் மீது அவ்வப்போது தங்களது கண்டனக் கணைகளை வீசி வருகிறார்கள். இது தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களிடையே ஒரு வினோதமான அறிக்கை விடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
ஒரு படம் வெளியானதும் அந்தப் படத்தின் விமர்சனத்தை படம் வெளியான அன்றே உடனடியாக வெளியிட வேண்டாம் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் பிரசன்ன குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இணையதளங்கள், பத்திரிகைகள் உடனடியாக படத்தின் விமர்சனத்தை வெளியிடும் போது அது திரைப்படத்தின் வசூலை பாதிக்கிறது. வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், கேண்டீன் வியாபாரம் உட்பட பலவற்றைப் பாதிக்கிறது. எனவே, படம் வெளியான உடனே அந்தப் படத்தின் விமர்சனத்தை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்வதாக,” அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலுங்கு மீடியாக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் ஒரு மோசமான படத்தைக் கொடுத்துவிட்டு, மக்களின் பணத்தை வசூலிப்பதில் மட்டுமே அவர்கள் தங்களின் நோக்கமாக வைத்திருக்கிறார்களா? என மீடியாக்கள் கேள்வி எழுப்புகின்றன.
இணைய தளங்களின் விமர்சனங்களையும் மீறி சமூக வலைத்தளங்களில் அதன் பயன்பாட்டாளர்கள் ஒரு படத்தை காட்சிக்குக் காட்சி கமெண்ட் அடிப்பதும் நடந்து கொண்டுதானிருக்கிறது. அந்த விவகாரத்தால் திரைப்பட ரசிகர்களுக்கிடையேயும் கடுமையான கருத்து மோதல்கள் சமூக வலைத்தளங்களில் எழுகின்றன.