ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபு நடித்த கும்பக்கரை தங்கைய்யா படத்தில் சினிமாவுக்கு வந்தவர் மதுரை மோகன். அதையடுத்து அவ்வப்போது சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்தபடி 25 வருடங்களாக சினிமாவில் போராடி வந்த மதுரை மோகனை முண்டாசுப்பட்டி படம்தான் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. முண்டாசுப்பட்டி படத்தில் அவர் நடித்த மீசைக்கார தாத்தா கேரக்டர் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்ததால், பின்னர் துணை முதல்வர், அண்டாவக்காணோம். அப்பாடக்கர், ரஜினி முருகன் என அரை டஜன் படங்களில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், முண்டாசுப்பட்டி படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகி விட்டது. அந்த படத்தைப் பார்த்துவிட்டு என்னை படங்களுக்கு புக் பண்ண வருபவர்கள், என் பெயரே தெரியாமல் முண்டாசுப்பட்டி தாத்தாதானே நீங்கள் என்று கேட்டே வருகிறார்கள். அது ரொம்ப சந்தோசமாக உள்ளது. ஆக, 65 வயதுக்குப்பிறகு சினிமா என்னை கண் திறந்திருக்கிறது.
மேலும், இப்போது படத்துக்குப்படம் எனக்கு நல்ல வேடமே தருகிறார்கள். இருப்பினும், ஒரு படத்திலாவது செண்டிமென்டான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதாவது, முத்துக்கு முத்தாக படத்தில் இளவரசு-சரண்யா இருவரும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். வறுமையில் வாடும் அவர்கள் பிள்ளைகளை காப்பாற்ற படும் போராட்டங்களை படமாக்கியிருப்பார் டைரக்டர் இராசுமதுரவன். அந்த வேடம் என்னை மிகவும் பாதித்தது.
அதனால், அதே சாயலில் ஒரு வேடத்தில், அதாவது வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு தந்தை, தனது பிள்ளைகளை காப்பாற்ற எப்படியெல்லாம் போராடுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.