ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுவாமி ரா ரா மற்றும் தோசெய் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுதீர் வர்மா தற்போது ஒரு டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது கிரைம் கதையில் காதலை அழகாக சொல்லி வெற்றி படத்தை எப்படி இயக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சுதீர் வர்மா திகழ்வதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாதிக்க துடிக்கும் புதிய இளம் இயக்குனர்களில் பலர் இந்த பார்முலாவை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த இரண்டு படம் தந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் இயக்குனர் சுதீர் வர்மாவை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது அவர் தனது மூன்றாவது படத்தில் மிகப்பெரிய ஹீரோவுடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை சந்தித்து கதை சொல்ல இருப்பதாக கூறப்படுகின்றது. தோசெய் படத்தை பார்த்த பிரபல ஹீரோவான நாகர்ஜுனும் இயக்குனர் சுதீர் வர்மாவை பாராட்டி விட்டு, இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதாவது சுதீர் வர்மாவிடம், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை போனில் தொடர்பு கொள்ளலாம். என்னிடம் கதையை சொல்லலாம், நாகர்ஜுன் கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் சுதீர் வர்மா பிரபல ஹீரோவுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.