தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நம்ம தமிழ் திரையுலகில் மேலே சொன்ன விஷயம் சாத்தியமா..? நிச்சயமாக இல்லை.. காரணம் தன்னை வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கூட, கொஞ்சம் சரிவை சந்தித்தால், அவருக்கு ஒரு படம் நடித்து தந்து அவரை கைதூக்கிவிடும் மனோபாவம் கொஞ்சம் கூட இங்கிருப்பவர்களிடம் இல்லை. ஆனால் 18 வருடமாக படம் இயக்காத ஒரு இயக்குனரை அழைத்து மோகன்லால் வாய்ப்பு தந்துள்ளார் என்றால் அவர் மீது மோகன்லால் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார் பாருங்கள்..
அந்த இயக்குனரின் பெயர் பி.அனில். 25 வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய 'அடிவேருகள்' என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் தான் இந்த அனில்.. மோகன்லாலை வைத்து மட்டுமே தொடர்ந்து நான்கு படங்களை இயக்கியுள்ள அனில் கடைசியாக 1997ல் சுரேஷ்கோபியை வைத்து, 'சூர்யகாந்தி' என்கிற படத்தை இயக்கியதோடு பீல்டை விட்டு ஒதுங்கியிருந்தார்.