பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ஈட்டி, வெற்றி மாறன் உதவியாளர் ரவி அரசு இயக்குகிறார். குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னையில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஒருவாரமாக படமாக்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் ரவி அரசு கூறியதாவது: இது ஸ்போர்ட்ஸ் படம்தான். ஆனால் முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் பற்றிய படம் இல்லை. அதர்வா தடகள வீரராக நடித்திருக்கிறார். தஞ்சாவூரைச் சேர்ந்த அதர்வா சென்னையில் நடக்கும் ஒரு தடகள போட்டிக்காக வருகிறார். வந்த இடத்தில் ஒரு அண்டர்கிரவுண்ட் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். தனது தடகள திறமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. தடகளம் வெறும் விளையாட்டல்ல அது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை சொல்லும் படம். அதோடு இதுவரை சினிமாவில் காட்டப்படாத ஒரு அண்டர்கிரவுண்ட் உலகத்தையும் காட்டுகிறோம்.
இதன் கிளைமாக்ஸ் ஒரு சேசிங். அதுவும் சென்னையில். சென்னை நகரில் பகலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது. அதனால் சேசிங் காட்சியை இரவில் நடப்பதாக மாற்றி நள்ளிரவு 2 மணிக்கு மேல் சேசிங்கை படமாக்கினோம். இப்படி ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி கிளைமாக்சை எடுத்து முடித்தோம். என்றார்.