டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன், பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். டீசர் பற்றிய ஒரு பார்வை...
ஏற்கெனவே கசிந்த கதைதான் டீசரில் எதிரொலிக்கிறது. கொடூர வில்லன்களால் கொல்லப்படும் சூர்யா, ஆவியாகவோ, காட்டேரியாகவோ, சக்தி வாயந்த அமானுஷ்ய சக்தியாகவோ மீண்டும் வந்து எதிரிகளை பழிவாங்குகிற கதை.
டீசரின் துவக்கத்தில் வரும் "எதிர்பார்க்கலல்ல... நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல. அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலேல்ல" என்கிற வசனமும், டீசரின் முடிவில் பிரேம்ஜி "இந்த வீட்டில் இரண்டு நாளா ஏதோ அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது" என்று குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்த சூர்யா சுவரில் நடக்கிற காட்சிகளும் காட்டேரி போன்று சிங்கப்பல் காட்டி சிரிகிற காட்சியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
கதையின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடக்கிறது என்பதையும் டீசர் உறுதிப்படுத்துகிறது. பாடல் காட்சிகள் பிரமாண்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி வித்தியாசமான கெட்அப்பில் வில்லனாக வருகிறார். பார்த்திபன் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.