தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை பிரியாமணி கூறினார். திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பிரியாமணி அங்கு நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் வாய்ப்பு எதுவும் வரவில்லை. வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்தான். பருத்தி வீரனுக்கு பிறகு அது மாதிரி அழுத்தமான கேரக்டர் வரவில்லை. சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களும் என்னை அணுகவில்லை.அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். இதை காதல் திருமணம் என்றும் சொல்லலாம். பெற்றவர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் சொல்லலாம். ஆனால் மாப்பிள்ளை சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும். மற்ற விபரங்களை உரிய நேரத்தில், உரிய முறையில் தெரிவிப்பேன். திருமணத்தை பிரமாண்டமாக நடத்த அம்மா விரும்பி உள்ளார். என்கிறார் பிரியாமணி