இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த 'யான்' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. எனவே யான் படத்திற்குப் பிறகு ஜீவாவுக்கு புதிய படம் எதுவும் 'கமிட்'டாகவில்லை. அதனால் அப்செட்டில் இருந்த ஜீவா, சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக உள்ள செந்திலை தயாரிப்பாளர் என்று அறிவித்து தானே ஒரு படத்தைம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் 'கவலை வேண்டாம்' என்ற படம் கமிட்டானது.
'யாமிருக்க பயமே' படத்தின் இயக்குனர் டீகே இயக்கும் இப்படத்தை 'ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்' எல்ரெட் குமார் தயாரிக்கிறார். யான் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட இப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார் ஜீவா. 'இது என்ன மாயம்', 'ரஜினி முருகன்' படங்களின் நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்போது இன்னொரு நாயகியாக நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் 'டார்லிங்' படத்தின் நாயகி. நிக்கியும், கீர்த்தியும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கின்றனர். எனவே அவர்களின் கால்ஷீட்டை வாங்கிய பிறகு கவலை வேண்டாம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாஉடன் இன்னொரு ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்கிறாராம்.