இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொதுவாக மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர் மணிரத்னம். தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மட்டும் மீடியாக்களிடம் பேச முன் வருவார். அப்படி பேசும்போது தன் படம் பற்றி மட்டுமின்றி பிற விஷயங்கள் பற்றியும் பேசுவார்.
அதன்படி தன்னுடைய ஓ காதல் கண்மணி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனபோது, அதற்கு முன்னதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்.
பிரபல வாரப்பத்திரிகை ஒன்றுக்கு மணிரத்னம் பேட்டியளித்தபோது, இளம் இயக்குநர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, இளம் இயக்குநர்களில் தன்னைக் கவர்ந்தவர் கார்த்திக் சுப்பராஜ் என்று கூறி இருக்கிறார். மணிரத்னத்தின் இந்தக் கருத்து ஏனைய இளம் இயக்குநர்களை கொந்தளிக்க வைத்துவிட்டதாக கேள்வி.