‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஞ்சான் படத்துக்குப் பிறகு சூர்யா நடித்து வரும் படம் மாஸ். வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக மாஸ் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று அண்மையில் முடிவடைந்தது. சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடித்துள்ள மாஸ் படம் மே 15 அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் வெளியிடப்பட்டது. அதில் எதிர்பார்க்கலை இல்லை? நான் மறுபடியும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலை இல்லை? என்று சூர்யா வசனம் பேசுவதுபோல் மாஸ் டீஸர் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிங்கம் படத்தில் சூர்யா பேசிய வசனம்தான் இது. என்றாலும் மாஸ் படத்தில் சூர்யா பேசிய வசனம், அஞ்சான் படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டுவதுபோல் உள்ளதாக பலதரப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர். அதாவது அஞ்சான் தோல்வியிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சூர்யா சொல்வதாகவே அந்த வசனத்தை ரசிகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். அதே அர்த்தம்தான் லிங்குசாமிக்கும் தோன்றி இருக்கிறது.