'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் விஜய் சந்தர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் சிம்பு - ஹன்சிகா நடித்த படம் - வாலு.
சுமார் 3 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட வாலு படம் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி வந்தது. முக்கியமாக சிம்பு - ஹன்சிகா காதல் காரணமாக வாலு படத்தின் படப்பிடிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. படப்பிடிப்புக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் காத்திருக்க, கேரவனிலிருந்து சிம்பு ஹன்சிகா இறங்கி வரவே அரைநாளாகிவிடுமாம். இப்படியாக சிம்புவும் ஹன்சிகாவும் பல நாட்கள் படப்பிடிப்பில் நடந்து கொண்டதால் படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது.
பட்ஜெட் எகிறியதால் தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகையும் பல மடங்கு அதிகமாகிவிட்டது. வாலு படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகையும் வட்டியும் சுமார் 45 கோடி ரூபாய். சிம்பு நடித்த படத்துக்கு பிசினஸ் பத்து கோடிக்குள்தான். வாலு படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து ரூ.10 கோடி தேறினாலும், பாக்கி 35 கோடியை புரட்டி பைனான்ஸியருக்கு ரூ.45 கோடியை தயாரிப்பாளர் செட்டில் பண்ண வேண்டுமாம். அப்படி செட்டில் பண்ணினால் மட்டுமே வாலு படம் வரும் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமாம். இந்த இக்கட்டானநிலையில் வட்டியை தள்ளுபடி செய்யும்படி பைனான்ஸியரிடம் கேட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.