ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விளையாட்டைப் பற்றி விளையாட்டாக படம் எடுத்து தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய தடத்தைப் பதித்த படம் 'சென்னை 28'. யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக வெங்கட் பிரபு இயக்கிய படம். முன்னணி நட்சத்திரங்கள் என யாருமேயில்லாமல் ஒன்றிரண்டு படங்களில் தலை காட்டியவர்கள், புதுமுகங்கள் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் சரியாக 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் 'சென்னை 28'.
எங்க படத்துல கதையே இல்லை என உண்மையைச் சொல்லி, வெறும் சம்பவங்களாலேயே ஒரு படத்தைக் கொடுத்து இப்படியும் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்த படம் அது. யுவன்ஷங்கர் ராஜா மட்டுமே அந்தப் படத்தில் அதிகம் தெரிந்த முகமாக இருந்தார். முக்கிய கதாபாத்திரங்களில், ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அஜய் ராஜ், விஜயலட்சுமி, இளவரசு என பலர் நடித்திருந்தனர்.
நகைச்சுவை இழையோடிய திரைக்கதை, கலகலப்பான கதாபாத்திரங்கள், யதார்த்தமான காதல், அருமையான நட்பு இவையனைத்தும்தான் அந்தப் படம் வெற்றியடைய காரணமாக அமைந்தது. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இன்று தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.