பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
38 வயதில் ஹார்ட் அட்டாக் வருமா..? வந்திருக்கிறதே.. அதுதான் மலையாள நடிகரும், சிறந்த கதாசிரியருமான முரளிகோபியின் மனைவி அஞ்சனாவின் உயிரையும் பறித்துவிட்டது. 38 வயதான அஞ்சனா, ஸ்டேட் பாங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர். நேற்று வழக்கம்போல தங்களது இரு குழந்தைகளை ட்யூசன் சென்டரில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அஞ்சனாவுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்பே உயிர் பிரிந்தது.
முரளிகோபி, அஞ்சனா தம்பதியினருக்கு பத்தாவது படிக்கும் கௌரி என்கிற மகளும் 2வது படிக்கும் கௌரவ் என்கிற மகனும் உள்ளனர். மறைந்த பிரபல நடிகர் பரத்கோபியின் மகன் தான் இந்த முரளி கோபி. பெரும்பாலும் மீடியாகுள் முன்போ, அல்லது விழாக்களிலோ முரளிகோபி குடும்பத்துடன் கலந்துகொண்டது இல்லை. தற்போதுதான் மிக பிஸியாக படங்களில் நடித்தும், கதை எழுதியும் வருகிறார் முரளிகோபி. இந்த இளம் வயதிலேயே அவரது மனைவியின் அதிர்ச்சி மரணம் அவரை மட்டுமல்ல, மலையாள திரையுலகையும் உலுக்கியுள்ளது. இன்று முற்பகல் அஞ்சனாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது.