தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் பெர்னான்டஸ், இலங்கையை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே... ஜாக்குலின் தற்போது அக்ஷய் குமார் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் பிரதர்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜாக்குலின் நடிப்பில் உருவாகியுள்ள அக்கார்டிங் டூ மேத்யூ என்ற சிங்களமொழி படம், வரும் ஜூலை மாதத்தில் வெளிவர உள்ளது. இந்நிலையில், அதே படக்குழுவினர் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஜாக்குலின் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்குலின், தற்போதைய நிலையில், பாலிவுட்டை தவிர்த்து, தனது தாய்மொழி படங்களிலேயே அதிக பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்ஷேவை ஆதரித்து, இலங்கையின் பல பகுதிகளில், ஜாக்குலின் பெர்னான்டஸ், சல்மான் கான் உடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது நினைவிருக்கலாம்....