துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் தமிழுக்கு வந்தவர் சோனியாஅகர்வால். பின்னர், 7ஜி ரெயின்போ காலனி, கோவில், திருட்டுப்பயலே, புதுப்பேட்டை என பல படங்களில் நடித்தவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்தார். அதையடுத்து விவாகரத்து ஆன பிறகு ஒரு நடிகையின வாக்குமூலம் என்ற படத்தில் மீண்டும் நாயகியாக நடித்தார். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் வானம் உள்பட சில படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்த சோனியா அகர்வால், தற்போது பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இதையடுத்தும் அச்சமென்ன, பொய் சொல்லாதே போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாலக்காட்டு மாதவன் படத்தில் நடிப்பதற்கு அவர் 15 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. காரணம், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சினேகா, மீரா ஜாஸ்மின், ப்ரியாமணி உள்பட பல நடிகைகளிடம் கால்சீட் கேட்டபோது யாருமே ஒத்துக்கொள்ளவில்லையாம். ஆனால் சோனியா அகர்வால்தான் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக்கொண்டாராம். அதோடு, என் வயதை மீறிய வேடத்தில் நடிக்கிறேன். அதனால் எனக்கு 25 லட்சம் சம்பளம் வேண்டும் என்றாராம். ஆனால் அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 15 லட்சம் வாங்கிக்கொண்டு அப்படத்தில் நடித்துள்ளாராம் சோனியா அகர்வால்.