'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
திரைப்படம், மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறது என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.
பொது ஊடகங்களில் குழந்தைகள் பயன்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று (ஏப் 25) நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி பேசியதாவது: திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் குழந்தைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது குழந்தைகளுக்கு பொருளாதார மேம்பாட்டையும், புகழையும் கொடுத்தாலும் இந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் கால அளவு, குழந்தைகளிடம் மற்றவர்கள் அணுகும் முறை, கல்வி, பராமரிப்பு ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தைகள் உரிமை சட்டம் மீறப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.