‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கார்த்திக். அவரைப்போலவே ராதாவும் அந்த படத்தில்தான் அறிமுகமானார். பாரதிராஜாவின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட அவர்கள் இருவருமே பின்னர் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வந்தனர்.
இதில் கார்த்திக் தனக்கென ஒரு பாணியில் நடித்து ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார். ஆனால், மார்க்கெட் ஓரளவு தொய்வடைகிறது என்றதும் அரசியலில் பிரவேசித்தார். அதன்காரணமாக அவருக்கென இருந்த மார்க்கெட் முற்றிலுமாக சரிந்து விட்டது. அதையடுத்து அவர் அனேகன் உள்பட சில படங்கள் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தபோதும் அவரால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான அவர் மகன் கெளதம், பின்னர் என்னமோ ஏதோ என்ற படத்திலும் நடித்தார். இப்போது அவர் நடிப்பில் வை ராஜா வை படம் திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. அதோடு, இந்திரஜித், சிப்பாய், ரங்கூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் கெளதம்.
ஆனால், அப்பா பாணியில் இல்லாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்க முயற்சித்து வரும் கெளதமிடம், உங்கள் அப்பா விட்டுச்சென்ற இடம் இன்னும் அப்படியேத்தான் உள்ளது. அதை நீங்கள்தான் பிடிக்க வேண்டும் என்று கார்த்திக்கின் அபிமானிகள் சிலர் வலியுறுத்துவதோடு, உங்கள் தந்தையின் ரசிகர்கள் அதற்காகவே வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறர்கள் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அப்பா இடத்தை தன்னால் நிரப்ப முடியுமா? என்கிற சந்தேகம் இருந்தாலும், மற்றவர்கள் உற்சாகப்படுத்துவதால் அந்த இடத்தை கைப்பற்றுவேன் என்று புதிய உத்வேகத்தில் செயல்படத் தொடங்கியிருக்கிறார் கெளதம்.