இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அட்டகத்தி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து, ரம்மி படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற கூடமேல கூட வச்சி என்ற பாடல் ஐஸ்வர்யா ராஜேஷை பிரபலப்படுத்தியது. அதையடுத்து, அதே விஜயசேதுபதிக்கு ஜோடியாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் தனுஷ், வெற்றி மாறன் இருவரும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை என்ற படத்திலும் நடித்தார்.
அப்படத்தில் 35 வயது சேரிப்பெண்ணாக தனது உடல்எடையை அதிகப்படுத்தி நடித்தார் அவர். அதனால் நடித்து முடித்த பிறகு இந்த படத்தினால் தனது ஹீரோயினி இமேஜ் பாதிக்கப்படுமோ என்றும் பயந்தார். ஆனால், அந்த படம் உடனடியாக வெளியே வரவில்லை. அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதையடுத்து திருடன் போலீஸ் உள்பட சில படங்களில் கமிட்டாகி நடித்தார்.
இந்தநிலையில், கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு ஒன்றரை வருடத்துக்கு பிறகு தேசிய விருது கமிட்டிக்கு அனுப்பப்பட்ட காக்கா முட்டை இப்போது தேசிய விருது பெற்றிருக்கிறது. இதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக பாரதிராஜா, பாலா உள்ளிட்ட இயக்குனர்களே பாராட்டியிருப்பதால் சந்தோசத்தின் உச்சாணியில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.