ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பின் அவர் அதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு போடப்பட்டு பின்னர் தமிழ்த் திரையுலக சங்கங்கள் சிலவற்றின் தலையீட்டின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டு பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.
ஆனால், ஸ்ருதிஹாசனால் படத் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்திற்கும், நஷ்டத்திற்கும் என ஸ்ருதிஹாசன் 8 லட்ச ரூபாயை தயாரிப்பாளருக்குத் தர வேண்டும் என சங்கங்கள் அபராதம் விதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய முன் பணத் தொகையான 10 லட்ச ரூபாயையும் உடனே திருப்பித் தரவும் சொன்னார்களாம். அந்த அபராதத் தொகையையும், அட்வான்ஸ் தொகையையும் ஸ்ருதிஹாசன் இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறுகிறார்கள்.