ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், '3' படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள படம் 'வை ராஜா வை'. இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. படத்தில் ஏற்கெனவே 'கொக்கி' குமார் ஆக ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்க, தற்போது புதிதாக ஒரு பாடலுக்கு இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை நடனமாட வைத்திருக்கிறார்கள். இவருடன் சேர்த்தால் இப்போது 'வை ராஜா வை' படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.
ஒருவர் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், அடுத்தவர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இவர் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இயக்குனர். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மனோ பாலா முன்னாள் இயக்குனர். அப்பா கதாபாத்திரத்தில் இயக்குனர் வசந்த் அறிமுகமாகிறார். இவர்களோடு புதிய வரவாக எஸ்.ஜே.சூர்யா. ஆக, மொத்தம் ஐந்து இயக்குனர்கள் 'வை ராஜா வை' படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்துள்ள அனைவருமே ஒளிப்பதிவாளர் வேல்ராஜை அதிகமாகவே புகழ்ந்து தள்ளினர். அதிலிருந்தே அவருடைய ஈடுபாடு படத்தில் எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். '3' படத்திற்கும் வேல்ராஜ்தான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.