ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
தெலுங்கு திரையின் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். தெலுங்கு திரையில் பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார். இவரது கார் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாய் ஓடியுள்ளது. கார் சாலையில் எதிரே சென்ற ஒருவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. விபத்துக்குள்ளான அந்த நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமமையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் கூட்டாக தயாரிப்பாளர் பெல்லம் கொண்ட சுரேஷின் அலுவலகத்திற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்பாளரின் அலுவலகைத்தை சூறையாடிய மக்கள் அவரையும் தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷை மீட்டுள்ளனர்.