'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வித்தகன் படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பதில் இருந்து மாறி விட்ட பார்த்திபன், ஜன்னல் ஓரம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதையடுத்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கினார். அதோடு பல பிரபல நடிகர் நடிகைகள் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தார். அப்படம் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்ததால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதோடு, அவரைத் தேடி மாஸ், நானும் ரெளடிதான், சூதாடி என சில மெகாப்பட வாய்ப்புகள் வந்ததால் அப்படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடிக்கத் தொடங்கினார்.
இதில் மாஸ் படத்தில் நடித்து முடித்து விட்ட பார்த்திபன், விஜயசேதுபதியின் நானும் ரெளடிதான் படத்திற்கு கால்சீட் கொடுத்தவர், குறித்த நாளில் படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம். அதனால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாம். மேலும், இதன்காரணமாக நயன்தாரா அப்படத்துக்கு கொடுத்திருந்த கால்சீட் முடிந்து கொண்டிருக்கிறதாம். அதையடுத்து அவர் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுத்திருப்பதால் கால்சீட் ப்ராபளம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறதாம்.
ஆனால், பார்த்திபன் எதற்காக அப்படத்தில் நடிக்க மறுக்கிறார்? என்று அப்பட யூனிட்டை விசாரித்தால் சரியான காரணத்தை சொல்ல தயங்குகிறார்கள். அதேசமயம், சில நாட்களில் பிரச்சினை முடிந்து படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.