'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தலைவர் தாணு மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
க்யூப் மற்றும் யுஎஸ்ஓ., நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியை செலுத்துவதாக தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கின்றனர். ஆனால் அந்த தொகையை அரசுக்கு அவர்கள் செலுத்துகிறார்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை. மேலும் தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடும் போது அந்தந்த தயாரிப்பாளர்களின் அனுமதி பெறாமல் விளம்பரம் பெறுகின்றனர். இதன்மூலம் ஒரு பெரும் வருவாய் க்யூப் மற்றும் யுஎஸ்ஓ., நிறுவனங்களுக்கும், இன்னொரு பகுதி திரைதுறை சார்ந்த வேறு ஒரு அமைப்புக்கும் செல்கிறது. இதிலிருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறிய தொகை கூட கிடைப்பதில்லை.
தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெளியிடும்போது அதற்கு கட்டணமாக ஒரு பெரும் பகுதியை வசூலிக்கின்றனர். தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்று தனிநபர் ஆதிக்கத்தை உருவாக்கி, தயாரிப்பாளர்களின் உரிமைகளை முடக்கி வருகிறார்கள். அவர்களுக்கு செய்யும் வேலைக்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டு, தயாரிப்பாளர்களின் லாபத்தை தன்வயப்படுத்தும் க்யூப் மற்றும் யுஎஸ்ஓ நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் விதமாக, நேற்றைய தினம் எங்களது கோரிக்கைகளை அடங்கிய அமைதி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இடம் மற்றும் முறையான அனுமதி பெற்று, அரசின் ஒப்புதலோடு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், இதற்கான தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவக்கப்பப்டுள்து.