ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
இப்படி ஒரு பூதாகரமான விஷயத்தில் சிக்கி, பலபேரின் கண்டனத்துக்கு ஆளாவோம் என்று தெரிந்திருந்தால் ராம்கோபால் வர்மா தனது கருநாக்கை அடக்கி வைத்திருப்பாரோ என்னவோ..? தேவையில்லாமல் மெகாஸ்டார் மம்முட்டியை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு அவமானப்படுத்தி விமர்சிக்க, இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மலையாள ரசிகர்கள், ராம்கோபால் வர்மாவுக்கு பேஸ்புக் வழியாகவே அழுகிய தக்காளி, முட்டைகளை கண்டனங்களாக்கி வீசி வருகிறார்கள். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானாவது அமைதியான முறையில் வர்மாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
ஆனால் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனோ இன்னும் இரண்டு படி கீழே இறங்கி விளாசியுள்ளார். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “உங்களுக்கு வெட்கமாக இல்லையா ராம்கோபால் வர்மா..? முதலில் இப்படிப்பட்ட நபர்களை விமர்சிக்கும் முன் உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்று பாருங்கள்.. இல்லையென்றால் அந்த தகுதியை வளர்த்துக்கொண்டு விமர்சியுங்கள்.. கிரியேட்டர் என சொல்லிக்கொண்டு ஷோலே படத்தையே கொலை செய்ய முயற்சித்த அறிவாளி தானே நீங்கள்..? உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன்” என படு காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.