‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய படங்கள் அவருக்கு சரிவையே கொடுத்து வந்தன. ஆனால் தற்போது அவர் இயக்கி வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி ஹிட்டாக அமைந்து, மணிரத்னத்துக்கு பெரிய உற்சாகமாக அமைந்திருக்கிறது. அதனால் இனி வெற்றிகளை தொடர வேண்டும் என்று தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.
அப்படி அவர் இயக்கவிருக்கும் புதிய படமும் தமிழ், இந்தி என உருவாகிறதாம். அதில் தனுஷ் நடிக்கயிருப்பதாக மணிரத்னம்தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. ராஞ்சனா, ஷமிதாப் படங்களுக்குப்பிறகு தனுஷின் இந்தி சினிமா மார்க்கெட் உயர்ந்திருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறாராம். தற்போது தனுஷ் விஐபி-2, சூதாடி படங்களில் நடிப்பதால் அந்த படங்களை முடித்ததும் இப்பட வேலைகள் தொடங்குமாம்.
மேலும், புதிய படத்திலும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிசி.ஸ்ரீராம் போன்றோர்களும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அதேசமயம், இந்த முறை தென்னிந்திய நடிகை இல்லாமல் ஒரு பாலிவுட் நடிகையே மணிரத்னம் படத்தில் நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.