அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
புரட்சிகரமான, அதிரடியான வேடங்கள் என்றாலே அதற்கு சமுத்திரகனிதான் பொருத்தமாக இருப்பார் என்றாகி விட்டது. அதற்கு காரணம், அவரும் சமூகத்தின் மீது ஓரளவு அக்கறை கொண்டவர். அதன் வெளிப்பாடுதான் ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கிய நிமிர்ந்து நில் படம்.
மேலும், சாட்டை படத்திற்கு பிறகு அவரது நடிப்பு மார்க்கெட் படு சூடாகி விட்டது. அதனால்தான் கிட்னா என்றொரு படத்தை இயக்கி நடிக்க களமிறங்கிய அவர், இப்போது அந்த படத்தை இயக்கும் வேலைகளை விட்டு விட்டு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர் அத்தனை படங்களிலுமே ஹீரோக்களுக்கு இணையான அல்லது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாகவே நடிக்கிறார்.
இதில், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் சாப்ட்டான வேடங்களில் நடித்தபோதும், தற்போது மாஸ், ரஜினி முருகன், காவல், ஆதார், விசாரணை உள்ளிட்ட பல படங்களில் அதிரடியான வேடங்களில் நடிக்கிறார் சமுத்திரகனி. அந்தவகையில், காவல் படத்தில் அதிரடி போலீசாக நடிக்கும் அவர், அந்த படத்தில் நடிக்கும்போது தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தளங்களிலேயே ஜிம் அமைத்து நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக்கிக்கொண்டேயிருந்தாராம். சமுத்திரகனியின் இந்த ஈடுபாடு அவரை வைத்து படம் பண்ணும் டைரக்டர்களுக்கு அவர் மீதும் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தி வருகிறது.