இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் என்றாலே ஒரு தனித்துவம் இருக்கும். சமூகப்பார்வை இருக்கும். கமர்சியலுக்காக தனது முகத்தை மாற்றிக்கொள்ளமாட்டார். அதோடு, சாதாரண ஹீரோக்கள்கூட அவர் படத்தில் நடித்தால் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து விடும். அந்த அளவுக்கு கதாபாத்திரங்களை சித்தரிப்பார். அந்த வகையில், ஜனநாதனின் முதல் படமான இயற்கையில் ஷாம், அருண்விஜய் இருவரும் நடித்தனர். அது அவர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. அதன்பிறகு ஜீவா நடித்த ஈ, பின்னர் ஜெயம்ரவி நடித்த பேராண்மை என மூன்று படங்களையும் வித்தியாசமான கதைக்களங்களில் இயக்கியிருந்தார்.