'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஓ காதல் கண்மணி' பலரின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தைத் தொட்டிருக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 'வாயை மூடிப் பேசவும்' மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்து தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுக்காமல் போய்விட்டது. நல்ல வேளை இரண்டாவது படமே மணிரத்னம் இயக்கத்தில் அமைந்தவிட்டதால் ஒரு நல்ல வெற்றியுடன் தப்பித்து விட்டார்.
'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் கூறியிருப்பதாவது, “இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு முன் நான் கதை கேட்கவேயில்லை. ஆனால், மணிரத்னம் சார் என்னை சந்தித்த போது முழு கதையையும் சொன்னார். இந்தப் படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது, நான் நிறைய கற்றுக் கொண்டேன். என்னைப் போன்ற வளரும் நடிகர்களுக்கு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது ஒரு கனவு.
என்னுடைய அப்பா மனதளவில் மிகவும் இளமையானவர். என்னுடைய படங்களைப் பார்த்து அவர் இதுவரை எதுவுமே சொன்னதில்லை. ஆனால், 'ஓ காதல் கண்மணி' படத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். என்னுடைய நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். மணிரத்னம் அவர்களின் இயக்கம் அப்பாவை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. இப்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் மலையாளப் படத்தில்தான் இருக்கிறது. தமிழில் நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன். மற்ற மொழிகளில் நடிக்கும் போது அந்தந்த மொழியைத் தெரிந்து நடித்தால்தான் நல்லது,” என துல்கர் கூறியுள்ளார்.