பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அழகுப் பெண்கள், ஆவேசமாக கோபப்படவும் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி ஒரு ஆவேசமான கோபத்தை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் நடிகை த்ரிஷா. அடிக்கடி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் எதையாவது பதிவிடுவது த்ரிஷாவின் வழக்கம். தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்குக் கூட பிறந்த நாளைத் தெரிவித்து ஆச்சரியப்படுத்துவார். அப்படிப்பட்டவர் அவருடைய கோபத்தை, அதுவும் யார் மீதோ உள்ள கோபத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதையும் சாதாரணமாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை, யாரையோ அறைவதைப் பற்றி பொட்டில் அடித்தாற் போல் சொல்லியிருக்கிறார்.
“சிலரின் முகத்தின் மீது நான் பலமான அறை ஒன்றைத்தான் தர முடியும். ஆனால், அப்படி செய்தாலும் அவர்களைத் தொட வேண்டுமே, அதனால் அறையாமல் இருப்பதும் நல்லது,” என அவர்களைத் தொடக் கூட மாட்டேன் என அவர் தெரிவித்திருப்பதிலிருந்தே அவருடைய கோபத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.
த்ரிஷாவுக்கு திருமண நிச்சயம் முடிந்து திருமணத் தேதிக்காகக் காத்திருக்கிறார். த்ரிஷாவின் திருமண விவகாரம் சில நடிகைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் அதைப் பற்றி அதே டிவிட்டரில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களைத்தான் த்ரிஷா அறைய வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரோ என்பதும் சந்தேகமாக உள்ளது. எப்படியோ, இதற்கு விரைவில் யார் பதிலளிக்கிறார்களோ, அவர்களைத்தான் த்ரிஷா அறைய நினைத்துள்ளார் என்பதை மட்டும் புரிந்து கொள்ளலாம்.