‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சிம்புவைப் பொறுத்தவரை டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற நல்ல பெயர் உண்டு. அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், எத்தனை ரிஸ்க்கான காட்சி என்றாலும் அவர் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து கொண்டும் வருகிறார். தற்போது இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்துள்ள சிம்பு அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முதலில் சட்டென்று மாறுது வானிலை என்ற பெயரில்தான் சிம்புவை வைத்து இயக்கினார் கெளதம்மேனன். விஜய், சூர்யா இருவரும் அவரை கைவிட்ட நேரத்தில் சிம்புதான் கெளதமுக்கு தக்க சமயத்தில் நானிருக்கிறேன் எனறு கைகொடுத்தார்.
அதேசமயம், அந்த நேரத்தில் அஜித்தும் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க முன்வந்ததால், அப்பட வேலைகளில் இறங்கியதால் சட்டென்று மாறுது வானிலை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது மீண்டும் தொடங்கி விட்டது. அதோடு, அந்த டைட்டிலுக்கு ஆரம்பத்திலேயே பிரச்சினை ஏற்பட்டதால், இப்போது அச்சம் என்பது மடமையடா என்ற எம்ஜிஆர் பட பாடல் வரியை டைட்டிலாக்கியிருக்கிறார் கெளதம்மேனன்.
மேலும், இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கும் சிம்பு, ஒவ்வொரு காட்சியிலும் அதிக ஆர்வத்துடன் நடிக்கிறாராம். குறிப்பாக, நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து, அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று சொன்னாலும், சில மணி நேரங்கள் மட்டும் தூங்கி விட்டு முதல்ஆளாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுகிறாராம். சிம்புவின் இந்த ஆர்வம் அப்பட யூனிட்டையே ஆச்சர்யப்படுத்தியுள்ளதாம். இதேபோல் செல்வராகவன் இயக்கும் பட வேலைகளிலும் புதிய உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகிறாராம் சிம்பு.