'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷாகித் கபூர், சைப் அலிகான் இருவரையும் வைத்து விஷால் பரத்வாஜ் அடுத்து ஒரு படம் இயக்க போவதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அது இப்போது உண்மையாகியுள்ளது. ஷேக்ஸ்பியரின், ''கிங் லியர்''-ஐ அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் தான் சைப்பும், ஷாகித்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷாகித் கபூர், சைப் அலிகான் இருவரையும் இயக்கியுள்ளார் விஷால் பரத்வாஜ். தற்போது ஷாகித் கபூர், ஷாந்தார் மற்றும் உத்தா பஞ்சாப் படங்களிலும், சைப் அலிகான், ஜப்பான் படமான ''தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ்'' படத்தின் கதை தழுவலை மையமாக வைத்து உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இந்த படங்களை முடித்த பின்னர் விஷாலின் படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. விஷால் தான் இயக்கும் இப்படத்தை 2016-ன் ஆரம்பத்தில் துவக்க இருக்கிறார்.