‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகையாக மட்டும் இல்லாமல் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக்கொண்ட நடிகை ரேவதி, முதன்முதலாக 2௦௦2ல் 'மித்ர மை பிரண்ட்' என்கிற ஆங்கிலப்படத்தை இயக்கினார். அந்தப்படத்திற்கு தேசியவிருதும் கிடைத்தது. அதன்பின் இந்தியில் 'பிர்மிலங்கே' என்கிற படத்தை இயக்கியபின், தொடர்ந்து டைரக்சன் பக்கம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் நான்கைந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகும் 'ஆந்தாலாஜி பிலிம்' எனப்படும் படத்திற்காக மலையாளத்திலும் இந்தியிலும் இரண்டு குறும்பட தொகுப்புகளை இயக்கி கொடுத்துள்ளார்.
இப்போது மீண்டும் ஒரு முழு நீள படத்தை இயக்கவேண்டும் என்கிற ஆசை ரேவதிக்கு தோன்றியுள்ளது. அந்தப்படத்தை தனது தாய்மொழியான தமிழிலேயே இயக்கவுள்ளார் ரேவதி.. தமிழில் மிகப்பெரிய நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த ரேவதி, மலையாளத்திலும் 29 படங்களில் நடித்துள்ளார். அதனால் மலையாளத்திற்கு பொருந்துகிற கதையை எழுதியுள்ள ரேவதி, இந்தப்படத்தில் ஒரு முன்னணி ஹீரோவை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறாராம்.