'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அறிமுகமான முதல் படத்திலேயே நடிகர் ஜெயராமுக்கு தங்கையாக நடித்தார் மலையாள நடிகை லேனா. தங்கையாக நடித்தது ஒரு குத்தமாய்யா..? தங்கையாக நடித்தவரை, அடுத்தடுத்து அக்காவாக, அண்ணியாக புரமோஷன் கொடுத்து அழகு பார்த்தது மலையாள திரையுலகம்.. அண்ணியாக நடித்துவிட்டால் அப்புறம் டைரக்ட்டாக அம்மா வேடத்தையும் கொடுத்து விடுவார்கள் தானே.. சரி என அதையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டார் லேனா.
சின்னக்குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவரைக்கும் ஓகே. அதற்கடுத்து 'விக்ரமாதித்யன்' படத்தில் துல்கர் சல்மானுக்கு அம்மாவாக நடிக்க லேனாவை, அழைத்தபோது ஜெர்க் ஆனவர், இயக்குனர் லால் ஜோஸ் என்பதால் நடித்துக்கொடுத்தார். ஆனால் இப்போது தொடர்ந்து ஜெயசூர்யா, பிருத்விராஜுக்கு, அவ்வளவு ஏன் இந்தியில் அக்சய் குமாருக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். இப்படியே போனால் அடுத்து மோகன்லால், மம்முட்டிக்கு கூட அம்மாவாக அடிக்க சொல்லி விடுவார்களோ என்கிற பயமும் அவரை பிடித்துக்கொண்டுள்ளது.
இந்த இளம் வயதிலேயே அம்மா கேரக்டர்களில் முடங்கிவிடுவோம் என பயந்த லேனா, இனி அம்மா வேடங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம்.. அதற்காக கதாநாயகி சான்ஸ் எல்லாம் அவர் கேட்கவில்லை. மலையாளத்தில் 'அருகில் ஓராள்', 'என்னும் எப்பொழும்', தமிழில் அநேகன்' போன்ற படங்களில் நடித்தது போல தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறாராம் லேனா..