Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படத்துக்காக நிஜத்தில் மொட்டையடித்த புதுமுகம் நட்சத்திரா! -டைரக்டர் ஜெயக்குமார்.ஜெ

23 ஏப், 2015 - 10:11 IST
எழுத்தின் அளவு:
New-actress-really-bald-for-cinema

தமிழ்த்திரை விருட்சம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் ''கிடா பூசாரி மகுடி''. இந்த படத்தில் தமிழ்மணி- நட்சத்திரா ஜோடி சேர்ந்துள்ளனர். ரவி சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் தயாரித்திருக்கிறார். கடலூர் மாவட்ட மண்வாசனை கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து பிரஸ்மீட் நடந்தது. அப்போது கிடா பூசாரி மகுடி படம் குறித்து இயக்குனர் ஜெயக்குமார்.ஜெ பேசுகையில், இப்படம் கடலூர் மாவட்ட வட்டார கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்காக நாயகன் தமிழ்மணி அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதேபோல் புதுமுக நடிகை நட்சத்திரா தனது கேரக்டருக்காக மொட்டையடிக்க வேண்டும் என்றதும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனே சம்மதம் சொன்னார்.


சாதாரணமாக பெண்கள் தலைமுடியை பெரிதாக வளர்க்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால், இந்த நட்சத்திராவோ அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியதால் அதில் முழு ஈடுபாடாகி விட்டார். அதனால் நிஜத்தில் மொட்டையடித்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதும் எந்தவித தயக்கமும் இல்லாமல் அப்படி நடித்தார். அந்தவகையில், இந்த படத்துக்காக மொட்டையடித்தால் அடுத்து உடனடியாக வேறு படத்தில் கமிட்டாக முடியாது என்று அவர் துளியும் நினைக்கவில்லை. அந்த மலர் கதாபாத்திரமாகவே அற்புதமாக வாழ்ந்துள்ளார்.


மேலும், இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தது படத்தின் தரத்தையே உயர்த்தி விட்டது. அதோடு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டதே பெருமையான விசயம். அது எங்களுக்கு கிடைத்த ஒரு புண்ணியம். நாங்கள் படமாக்கிக்கொடுத்த இரண்டரை மணி நேர புட்டேஜை பார்த்து விட்டுத்தான் அவர் இசையமைப்பதற்கே ஒத்துக்கொண்டார். நாங்கள் கெடுத்த டீசரும் அவருக்கு பிடித்திருந்தது.


அதோடு, அவரிடத்தில் கடலோரக்கவிதைகள் படத்தில் இடம்பெற்ற, அடி ஆத்தாடி பாடல் போன்று ஒரு டியூன் கேட்டபோது, அது அந்த நேரத்தில் தோன்றிய டியூன். உங்க படத்துக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் என்றார். ஆனால் நாங்கள் அடுத்தமுறை அவரை சந்திக்க சென்றபோது ஆட்டுக்குட்டி -என்று ஒரு டியூனை பாடிக்காண்பித்தார். அருமையாக இருந்தது.


அதுமட்டுமின்றி, சில டியூன்கள் நமக்கு பிடிக்காதபோதும் அதை எப்படி சொல்வது என்று தயங்கினால், அவரே கண்டு பிடித்து விடுவார். என்ன டியூன் பிடிக்கலையா. சரி வேற போட்டுக்காட்டுறேன் என்பார். அந்த அளவுக்கு நாம் மனதில் நினைப்பதையும் கண்டு பிடித்து விடக்கூடியவர் இளையராஜா என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in